புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டையில் அடுத்தகட்ட அகழாய்வு பணி தொடக்கம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டையில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அரண்மனை திடல் எனும் பகுதியில் 15 குழிகள் கடந்த மே மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. அடுத்த கட்டமாக கோட்டை கரை எனும் இடத்தில் கோட்டையின் கட்டுமானத்தை அறியும் வகையில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 5*5 மீட்டர் அளவில் குழிகள் அமைக்கும் பணியில் தமிழக தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை