புதுக்கோட்டை புத்தக திருவிழாவையொட்டி மாணவர்களுக்கான செஸ் போட்டி

 

புதுக்கோட்டை, ஜூலை31: புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை சதுரங்கக் கழகத்தால் நேற்று செஸ் போட்டி நடந்தது. போட்டிக்கு புத்தகத் திருவிழா அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். போட்டியை கவிஞர் தங்கம் மூர்த்தி தொடங்கி வகித்தார். அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் மணவாளன், கவிஞர் ஜீவி அகியோர் வாழ்த்தி பேசினர். 75 மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் செஸ் போட்டியில் பங்கேற்றனர். பெரியவர்களுக்கான போட்டியில் முதலிடத்தில் ரஞ்சித், இரண்டாமிடத்தில் ஜோதிகா, மூன்றாமிடத்தில் ரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். சிறுவர்களுக்கான போட்டியில் ஜெயபிரதீபன், அரீஷ் இம்ரன், பால சதுர்த்தியன் ஆகியோர் முறையே மூன்று இடங்ளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு புத்தக திருவிழா நிறைவு விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளை புதுக்கோட்டை சதுரங்க கழக நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்க, பொருளாளர் விமலா நன்றி கூறினார்.

Related posts

புதுக்கோட்டையில் உலக மருத்துவ தினம் கொண்டாட்டம்

கொலை வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பொன்னமராவதி அருகே கோயில் நிலைத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை