புதுக்கோட்டை நமனசமுத்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை


புதுக்கோட்டை: புதுக்கோட்டை நமனசமுத்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளங்குடிபட்டியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.

கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு எடுத்துள்ளனர். 5 பேரும் விஷம் குடித்து காரிலேயே தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மதுரை தேசிய நெடுஞ்சாலை நமனசமுத்திரத்தில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் நமனசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த காரை சோதனை செய்த போது 2 பெண்கள் உட்பட 5 நபர்களை சடலமாக மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் சேலத்தில் இருந்து வந்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு காரை சோதனை செய்தபிறகு கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

3 குற்றவியல் சட்டங்கள்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

OTT தளத்தில் சினிமா, வெப் சீரியல்களை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரி மனு

வரத்து குறைவு.. தேவை அதிகரிப்பால்… தினந்தோறும் எகிறும் தேங்காய் விலை