Sunday, June 30, 2024
Home » புதுகை மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

புதுகை மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

by Karthik Yash

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று மாலை சிறைபிடித்து கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (26), குமார் (32) ஆகிய 6 பேர் ஒரு விசைப்படகில் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று மதியம் மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மாலை மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 6 பேரையும் கைது செய்து படகுடன் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். தற்போது புதுகை மீனவர்கள் 6 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi