சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை மாநில கள்ளச்சாராயம் குடித்து விக்கிராவாண்டி அருகே மதுராபூரி கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.