இதனால் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து ரேஷன் கார்டுகளையும் உள்ளடக்கிய காப்பீடுத் திட்டம் அமல்படுத்தப்படுமா?” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, “ஆயுஷ்மான் பாரத் திட்டம் புதுச்சேரிக்கு ஓரளவுதான் பயன்பட்டுள்ளது. இது முழுமையான திட்டமாக இல்லை. சில மாநிலங்களில் காப்பீடு திட்டம் தனியாக வைத்துள்ளனர். இத்திட்டத்தை மாற்றி முழுமையாக செயல்படுத்தவுள்ளோம். அதன்படி புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.” என்று சொன்னார்.