புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் குறித்து விசாரணை செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். சிறுமியின் இறுதி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருளை தடை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.