புதுச்சேரி: புதுச்சேரியில் ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ஹோட்டல் உரிமையாளர் இளையாள்வார், பொறுப்பாளர் இருதயராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹோட்டல் ஊழியர்கள் ஆனந்த் மற்றும் ஆபிரகாமிற்கு புதுச்சேரி போலீசார் வலைவீசியுள்ளனர்.