புதுச்சேரி: 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை உறுதித்தன்மையை இழந்ததால் பாதுகாப்பு கருதி இடம் மாற்றம் செய்ய பொதுப்பணித்துறை பரிந்துரை செய்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதலை அடுத்து வேறு இடத்திற்கு புதுச்சேரி ஆளுநர் மாளிகை மாற்றப்படுகிறது. ஆங்கிலேயர் படையெடுப்பு, பிரெஞ்சுகாரர்களால் மீட்டுருவாக்கம் என வரலாற்று பின்னணியை கொண்ட புதுச்சேரி ஆளுநர் மாளிகை.