புதுச்சேரி: புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆளுநர் தமிழிசையை தடுத்த பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்புக்கு இடையே சோலைநகரில் சிறுமியின் உடலுக்கு ஆளுநர் தமிழிசை அஞ்சலி செலுத்தினார். ஆளுநர் தமிழசைக்கு எதிராக வெளியேறு, வெளியேறு என பொதுமக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.