புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் சூழலில் கல்வீச்சு நடந்துள்ளது.