புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் சூதாட்ட கிளப் செயல்பட அனுமதி அளித்த நகராட்சி ஆணையர் அருள்பிரகாசம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏனாமில் செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்பால் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சூதாட்ட கிளப்பை மூட நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையர் அருள்பிரகாசத்தை, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. சூதாட்ட கிளப்பை மூட நடவடிக்கை எடுக்காமல், செயல்பட அனுமதி அளித்ததால் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனாம் நகராட்சி ஆணையர் அருள் பிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.