புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அசோகன் உதவி செய்துள்ளார். பேருந்து பயணத்தின்போது நெஞ்சுவலி ஏற்பட்ட பெண்ணை தனது ஜீப்பில் மருத்துவமனைக்கு ஆய்வாளர் அழைத்துச் சென்றார். ஜீப்பில் அழைத்துச் சென்று பெண்ணை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அசோகன் மருத்துவமனையில் அனுமதித்தார்.