புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தை நோக்கி ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். வாடகை இருசக்கர வாகனம் மற்றும் இ-பைக் திட்டங்களை தடை செய்ய வேண்டும். கட்டட தொழிலாளர்களுக்கு வழங்குவது போல தீபாவளி உதவித்தொகையாக ரூ.4,000 வழங்க வேண்டும். மேலும், ஆட்டோவுக்காக ஆன்லைன் செயலியை உருவாக்கி குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.