புதுச்சேரி சட்டசபை திடீர் முற்றுகை

புதுச்சேரி சட்டசபை திடீர் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் சன்னியாசித்தோப்பு அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மயான கொள்ளை திருவிழா நடந்து வருகிறது. தற்போது அந்த இடத்தை சிலர் அபகரிக்க பார்ப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் மீனவ பஞ்சாயத்தார், ஆலய நிர்வாகிகள் நேற்று சட்டசபையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சட்டசபை முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலி பத்திர கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி கோஷமிட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் மீனவ பஞ்சாயத்தார் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்