ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மதிப்பிலான நூல்களை இணைய தளம் வழி தேர்வு செய்து பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் http:// bookprocurement.tamilnadupubliclibraries.org/என்ற இணைய தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் தலைவர் மனுஷ்யபுத்திரன், இணை இயக்குநர் இளங்கோவன் சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் இரவல் வழங்கும் சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சிறுவர் நூல்களும், தமிழ் நூல்களும் வாசகர்களுக்கு வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி யாக தேர்வான 2 மாவட்ட நூலக அலுவலருக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.