சென்னை: மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். பொது கலந்தாய்வால் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும். அதிகளவு மருத்துவ கல்வி இடங்களை வைத்துள்ள தமிழகத்தில் தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர்கள் பயன்பெறுவர். பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
“மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து
previous post