ஆகவே இது போன்ற நபர்களை பிடிப்பதற்காக கேரள அரசு புதிய திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. அதன்படி குப்பை வீசுபவர்கள் குறித்த விவரங்களை போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் அளிப்பவர்களுக்கு ₹2500 அல்லது குப்பைகள் வீசுபவர்களிடருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையில் 25 சதவீதம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் செயலாளர்களுக்கு வாட்ஸ் ஆப் அல்லது இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆதாரங்களை அளிப்பவர்களின் பெயர், விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், இவர்களுக்கான பரிசுத்தொகை 30 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.