கோவை: துடியலூர் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் துன்புறுத்துவதாக மாணவி அளித்த புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. 7ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி பள்ளியில் நேரடி விசாரணை நடத்தி வருகிறார். மாணவி, பெற்றோர் தரப்பில் பொய்யான குற்றச்சாட்டு வைப்பதாக தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தகவல் தெரிவித்தார்.