தடை உத்தரவு விலக்கப்படாத நிலையில், ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்து காளையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த ஆக.31ல் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உள்ளதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான ஒரு வழக்கில் தடை உத்தரவும் உள்ளது. ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இல்லாவிட்டாலும், இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால், இடமாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என கூறியுள்ளார்.