சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்தி பல பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு பரிசோதிக்கும்பொழுது வலதுபக்கம் உள்ள சக்கரத்தில் நட்டுகள் இல்லாததை கவனித்தார். இந்த நிலை போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய ஒரு அவமானம். பயணிகளை அழைத்து செல்லும் பேருந்துகள் பணிமனையில் வேலை செய்யும் பொழுது ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்ததாகவும், ஆகையால் டயரை கழட்டி மாட்டும் பொழுது நட்டுகளை டைட் செய்யாமல் விட்டு விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இத்தகவலை கவனத்தில் எடுத்து போக்குவரத்து துறை அமைச்சர், இந்த வண்டியை சீர் செய்த மெக்கானிக் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மேற்பார்வையாளர் மட்டுமின்றி இந்த வண்டியை பரிசோதனை செய்த பரிசோதகர் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். பொதுமக்கள் உயிரோடு விளையாட வேண்டாம். வாகனங்களை தயவு செய்து பரிசோதனை செய்யுங்கள். தரமாக இல்லாத வாகனத்தை நிறுத்தி விடுங்கள். தனியார் வாகனத்தையும் சோதனை செய்யுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.