புதுடெல்லி: தெலங்கானாவில் நாகர்கர்னூர் மக்களவை தொகுதியில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி எம்பி போதுகாந்தி ராமுலு அக்கட்சியில் இருந்து விலகி நேற்று பாஜவில் இணைந்தார். அவரது மகன் பாரத் பிரசாத் மற்றும் தெலங்கானாவை சேர்ந்த மேலும் பல பாரத் ராஷ்ட்ரிய சமிதி தலைவர்களும் பாஜ மூத்த தலைவர்கள், ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.