இதையறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பிஆர்கட்சி எம்எல்ஏக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கடந்த சில மாதங்களில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு தாவினர். இதன்தொடர்ச்சியாக ஜகித்யாலா பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ சஞ்சய் குமார், முதல்வர் ரேவந்த்ரெட்டியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார். அவரை சால்வை அணிவித்து முதல்வர் ரேவந்த்ரெட்டி கட்சியில் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் பலம் அதிகரித்துள்ளது. இதுதவிர பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மேலும் 20 எம்எல்ஏக்கள், காங்கிரசில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.