நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் உள்ளிட்ட சிபிசிஐடி போலீசாரும், அரசு வழக்கறிஞர் சாஜகான் ஆகியோர் ஆஜராகினர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் சயான், ஜித்தன் ஜாய் ஆகியோர் ஆஜராகினர். 2 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரிய நிலையில் வழக்கு விசாரணையை ஆக.30-க்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.30க்கு ஒத்திவைப்பு..!!
previous post