இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று முன்தினம் கூறுகையில், ‘‘வங்கதேசத்தில் சுமார் 15000 இந்தியர்கள் இருக்கின்றனர், டாக்கா உட்பட பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்திய மக்கள் வெளியேறுவதற்கு உதவி வருகின்றன” என்றார். இந்நிலையில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அண்டை நாட்டில் நிகழும் மோசமான கலவரத்தின் காரணமாக சுமார் 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் சர்வதேச எல்லைகள், சாலைகள், ரயில்வே மூலமாக திரும்பியுள்ளனர். 200 மாணவர்கள் வழக்கமான விமான சேவைகள் மூலமாக இந்தியா திரும்பியுள்ளனர். இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய தூதரகங்கள் வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.