ராஜஸ்தான்: நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். நீட் தேர்வு பயிற்சி மையம் அதிகம் உள்ள கோட்டாவில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டி அடித்தனர்.