அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, பெண்கள் பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பணம் செலவு செய்து பல திட்டங்களை செயல்படுத்தும் அரசை பாராட்டுகிறோம். ஆனால், இதுகுறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு பிளீடர், உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும் என்று பதிலளித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கனிமொழி மதி, திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாக கூறினார். இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.