அதை ஏற்க மறுத்த நீதிபதி, வீரராகவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது, ரவுடி வீரராகவன் தனது பாதுகாப்பிற்காக கைத்துக்கி வைத்திருப்பதாகவும், இந்த துப்பாக்கி தனது நண்பர் அப்பு (எ) புதூர் அப்புவுக்கு சொந்தமானது என்று கூறி, துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, காசிமேடு காவல் நிலையத்தில் இந்த துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட போலீசார், இந்த துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது சட்டவிரோதமாக வைத்திருந்ததா என விசாரணை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அப்புவின் துப்பாக்கி அது என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை மேலும் தீவிரமாகியுள்ளது.