சொத்துவரி உயர்வு என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உயர்த்தப்பட்டது: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சொத்துவரி உயர்வு என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உயர்த்தப்பட்டது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். 2018-ல் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு 50 முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தினார்கள். அதிமுகவை தன்வசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். 5 பேர் உயிரிழப்புக்கு அறிக்கை விட்ட எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அரசை குறை கூறாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு