சென்னை: சொத்து அபகரிப்பு தொடர்பாக நடிகை கவுதமி அளித்த புகாரில் அழகப்பன் என்பவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தனது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அழகப்பன் என்பவர் அபகரித்துக் கொண்டதாக நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார். கவுதமியின் புகாரை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அழகப்பன் விசாரணைக்கு ஆஜரானார். அழகப்பன், அவரது மனைவி, மகன் ஆகியோரிடம் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.