தாம்பரம்: கூடுவாஞ்சேரி பெருமாட்டுநல்லூரில் சொத்து தகராறில் மின்வாரிய பணியாளர் உத்திராடம்(56) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஏரிக்குள் வைத்து உத்திராடத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தம்பி மகன் சுபாஷ் (22) தப்பி ஓடினார். பெரியப்பாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய சுபாஷை போலீசார் தேடி வருகின்றனர்.