தமிழக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அருண் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:
பணத் தகராறு, நிலத் தகராறு, சொத்து தகராறு, பாதை தகராறு, அறிவுசார் சொத்து தகராறு போன்ற முற்றிலும் சிவில் பிரச்னை தொடர்புடைய மனுக்கள் மீது சில காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. எனவே சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் தவிர, சிவில் பிரச்னைகளில் போலீசார் தேவையில்லாமல் தலையிடக்கூடாது.
மேலும் எப்ஐஆர், சி.எஸ்.ஆர் அல்லது உயர் அதிகாரிகளால் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்தவொரு மனுக்கள் மீதும் காவல்துறையின் எந்த விசாரணையும் இருக்கக்கூடாது. சிவில் விவகாரங்களில் விசாரணை அல்லது தலையிடுவதை காவல்துறை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் காரணமாக, சிவில் விவகாரங்களில் விசாரணை நடத்துவது அல்லது தலையிடுவது முற்றிலும் அவசியம் என்று காவல்துறை அதிகாரி கருதினால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகரங்களில் உள்ள காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.