கிளை செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, பகுதி செயலாளர் முருகன் மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி துணை ஆணையர் லலிதாவிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் கலந்து பேசி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.