ஆனாலும் இடைக்கால அறிக்கை தான் தாக்கல் செய்யப்பட்டதே தவிர, முழு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. முழு அறிக்கை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு கருணாநிதி தான் காரணம். பல காவலர்கள், அதிகாரிகள் 14 ஆண்டுகள் ஆகியும் பதவி உயர்வு அளிக்கப்படாமல் உள்ளனர். பணியின் தன்மை உணர்ந்து எட்டு ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். முதலமைச்சர் இதனை பரிசீலிக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்கள் எண்ணிக்கை இல்லாத சூழல் உள்ளது. எனவே மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு.. பள்ளிக்கூடம் அருகாமையில் கஞ்சா விற்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், போதை பொருள் விற்பனை செய்தல், உயிருக்கு ஆபத்து விளைவித்தல் போன்ற குற்றங்களுக்கு ஆன தண்டனை போதுமானதாகவும், கடுமையானதுவும் இல்லை. இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையைக் கடமையாக்கி, குற்றங்களை முற்றிலும் தடுத்த முதற்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 இல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும், என தெரிவித்தார்.