சென்னை: சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ராமகிருஷ்ணா மடத்துக்கு பதில் விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.