டிராக்டர் ஏறியதில் தலை நசுங்கி பேராசிரியை பலி மாணவி படுகாயம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே பெருங்கடம்பனூரை சேர்ந்த அரவிந்தன் மனைவி அபிராமி (28). தனியார் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை. இவர் நேற்று காலை கல்லூரிக்கு டூ வீலரில் மாணவி ஜனனியை ஏற்றிக்கொண்டு வடகுடி சாலையில் வந்தார். அப்போது அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த டிராக்டர், டூ வீலர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த அபிராமி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி இறந்தார். மாணவி ஜனனி வலது காலில் பலத்தகாயத்துடன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு