லக்னோ: 10வது புரோ கபடி லீக் போட்டிகள் உ.பி.யில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் ஹரியானா டீலர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் 45-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோத்தா-புனேரிபால்டன் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் புனேரிபால்டன் 40-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை வீழ்த்தியது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பாட்னா-டெல்லி அணியும், 2வது போட்டியில் யு மும்பா-பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதுகின்றன.