டெல்லி: நீட் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன் என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருப்பது கேள்விகளை எழுப்புகிறது. நீட் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். நடைபெற்று முடிந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று கூறியுள்ளார்.