சென்னை: தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துக்குமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் செய்தியாளர் முத்துக்குமார் உயிரிழந்தார். முத்துக்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.