சென்னை: குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தகவல் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு 18 வயது வரை 16 தவணைகளாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை இலவசமாக பெறலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் கொண்டுவரவுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.