உடனே, சூதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதுடன், ஊழியர்களை அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளார். இதையடுத்து, சில நொடிகளில் பேருந்து தீ பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. பின்னர், இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், எரிந்துக்கொண்டிருந்த ஏசி பேருந்தில் தண்ணீரை பீய்ச்சியடித்து, அரை மணி நேரம் போராடி பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும், பேருந்து முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.