ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

ஒசூர்: ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.14.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒசூர் – பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை. கேஸ் கட்டிங் மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பணம் கொள்ளை தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை