அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்கவேண்டும். அமைப்புகளின் செயல்பாடுகளைச் செயல்படுத்த மாநில அமைப்பு மூலம் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும். முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும். அப்படி மாநில அமைப்பிடம் அனுமதி பெறாமல் முகாம்களை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.