தனியார் விடுதியில் மாணவி மர்ம சாவு

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கல்யாணி பகுதியைச் சேர்ந்த சரவணன்-ரேவதி தம்பதியின் மகள் கோபிகா (17). இவர் நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில், ஓட்டல் மேனேஜ்மென்ட் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரை கல்லூரி நிர்வாகம், 3 மாத பயிற்சிக்காக கொல்லிமலை சேலூர்நாடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அனுப்பியது. அங்கு தோழி கவுசல்யாவுடன் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், விடுதி கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்த கோபிகாவை செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிந்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துகின்றனர்.

Related posts

போர்க்களத்தில் அல்ல மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது: ஐநாவில் பிரதமர் மோடி உரை

பாம்பு கடித்து இறந்த வாலிபர் இறுதி சடங்கில் பாம்பை எரித்த கிராம மக்கள்

மறைந்த சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சமதர்ம இந்தியாவை உருவாக்க பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு