சென்னை : சிறைவாசிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தாய் மைதிலியை வேலூருக்கு மாற்றக் கோரி அவரது மகள் சரண்யா மனு தாக்கல் செய்துள்ளார். சிறைக்குள் குற்றங்களில் ஈடுபடும் கைதிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.