சேலம் : சிறுமியை பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளிக்கு 47 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, முருகேசனுக்கு 3 ஆயுள் தண்டனை, 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.