சென்னை: தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளராக (கணக்கு மற்றும் பணி வரவு) ஐஏஎஸ் அதிகாரி சி.நெடுஞ்செழியன் கடந்த 19ம் தேதி பொறுப்பேற்றார். இவர், 1996ம் ஆண்டு இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் சேர்ந்தார். கடந்த 28 ஆண்டுகளாக இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.