குமரி: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவது மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே என தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜி.யு.போப், கால்டுவெல் குறித்து பேசுவதற்கு ஆளுநருக்கும், மோடிக்கும் அருகதை கிடையாது. விஞ்ஞான யுகபுரட்சி நடக்கும் கலத்தில் விஞ்ஞானத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்றார்.