சூரத்: பிரதமர் மோடி குறித்து பேசியதாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான ராகுலின் மேல்முறையீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டு வருகிறார். சூரத் அமர்வு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அபிஷேக் சிங்வி தெரிவித்திருக்கிறார்.