இப்போது காஷ்மீரில் தீவிரவாதிவாதம் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான மாற்றங்கள் நடந்துள்ளன. ஜம்முவிலிருந்து காஷ்மீரில் இணைக்கப்படாத ரயில் வழித்தடங்கள் விரைவில் இணைக்கப்படும். காஷ்மீர் மக்கள் நேரடியாக டெல்லிக்கு ரயிலில் வரலாம். இவ்வாறு கூறினார். இதே போல, அரியானா மாநிலத்தில் குருஷேத்ராவில் நேற்று பிரசாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘ ஒன்றிய அரசு 3வது முறையாக பதவி ஏற்று இன்னும் 100 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் ரூ.15 லட்சம் கோடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன’’ என்றார்.
* தீவிரவாதம் அதிகரித்துள்ளது
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 98 நாட்களில் 25 தீவிரவாத தாக்குதலில் 21 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர். 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கெல்லாம் யார் பதில் சொல்வார்கள்?’’ என்றார்.